Thursday, 6 August 2015

Pro Kabaddi – தமிழர்களின் உச்சகட்ட அவமானம்


தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான கபடி போட்டியானது தமிழகத்தில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதற்கு மிகப்பெரிய உதாரணம்தான் இந்த Pro Kabaddi போட்டி.

இந்த முறையும் தமிழகத்தின் சார்பில் எந்த அணி இடம் பெறவில்லை சரி போகட்டும் தமிழக வீரர்கள் மற்ற அணியில் விளையாடுகிறார்ளா என்றால் அதுவும்கூட இல்லை. அவ்வளவுதான் நமது தமிழகத்திற்கு இருக்கும் மரியாதை போலும் கபடியில்.

கபடி போட்டியானது தமிழர்களின் அடையாளங்களில் என்று ஆனால் இப்போது நடப்பதைப் பார்த்தால் அடையலாம் அழிக்கப்பட்டுவிடும் போல் தெரிகிறது. தமிழர்களாகிய நாம் தொலைக்காட்சியில் மற்ற அணிகள் விளையாடுவதைப் பார்த்து Pro Kabaddi போட்டி அமைப்பாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சேர்வதற்கு மட்டுமே பயன்படுகிறோம்.

எந்த ஒரு தனியார் அமைப்புகூட முன்வரவில்லை ஒரு அணியை முன்னிலைப்படுத்த, தமிழகத்தில் கபடி விளையாட்டு வீரர்களா இல்லை. ஒரே ஓர் நாளில் ஓர் விளம்பரம் கொடுத்தால்கூட போதும் ஆயிரக்கணக்கான கபடி வீரர்கள் திரண்டுவிடுவர்கள். இவர்களை ஓர் அணியாக உருவாக்கி முன்னிலைப் படுத்த ஒரே ஒரு அமைப்புகூட இல்லாமல் போனது வருத்தத்தையும்விட மிகவும் அவமானத்தைதான் உண்டாக்குகிறது.


அடுத்தமுறையாவது தமிழகத்தின் சார்பில் ஓர் அணியை முன்மொழிய ஓர் அமைப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் இல்லையென்றால் வழக்கம்போலவே அடுத்தமுறையும் அவமானப்பட வேண்டியதுதான்.

No comments:

Post a Comment