Friday 28 November 2014

ரஜினி அரசியலுக்கு வந்தால் மோதிப்பார்க்கத் தயார் - சீமான்


ஒரு நிகழ்ச்சியில் சீமான் கூறியது, நாங்கள் ஆட்சியை பிடிக்க சில ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் நிச்சயம் ஆட்சியை கைப்பற்றுவோம். அது வரை காத்து இருக்கிற பொறுமையும், தோல்வி ஏற்பட்டாலும் தொடர்ந்து மக்களுக்காக போராடுகிற தைரியமும் எங்களுக்கு உண்டு. சீமான் முதல்-அமைச்சர் ஆகிறானா, இல்லையா? என்று தெரியாது. ஆனால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் இந்த மண்ணை ஆளுகிற சூழலை உருவாக்காமல் விடமாட்டோம்.

ரஜினி அரசியலுக்கு வரணும் என்று பலரும் அழைக்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரட்டும் பார்க்கலாம். தனியாக வந்தாலும் சரி, யாரோடும் கூட்டணி வைத்து வந்தாலும் சரி. தேர்தல் வரட்டும். மோதிப்பார்க்க தயாராக உள்ளோம்.

2016 தேர்தலில் அனைத்துத் தொகுதியிலும் தனித்து நிற்கப்போகிறோம். எல்லா தமிழர்களுக்கான பொதுக்கட்சியாக, நம் கட்சியை எடுத்துச்செல்லவேண்டும். வெற்றி, தோல்வி இரண்டையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்போம்.

வாழ்வோ, சாவோ நாம் தனித்துத்தான் நிற்கப்போகிறோம். எங்கள் தலைமையை ஏற்று, எங்கள் பின்னே வர விரும்புபவர்கள் வரலாம்.



No comments:

Post a Comment