Thursday 30 April 2015

என்ன படிக்கலாம் : பொறியியல் படிக்க விருப்பமா ஒரு நிமிடம்…! பகுதி 2

பகுதி 2

உங்களுக்குகொன்றுத் தெரியுமா? என்பது சதவீதம் மாணவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஒரு BE இருக்கவேண்டும் என்று மாணவர்கள் இருக்கிறார்கள் இவர்களின் பெற்றோர்களும் அப்படித்தான். இவர்களில் பெரும்பாலானவர்கள் பணம் படைத்தவர்கள்தான்.

இவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தில் நன்கொடை கொடுத்து தரமான கல்லூரியில் இடம் வாங்கி விடுகிறார்கள். கல்லூரியும் பணம் வருகிறதே என்று பணத்தை பெற்றுக்கொண்டு இடத்தை தருகிறார்கள்.

இதனால் உண்மையிலேயே திறமை இருந்தும் தரமான கல்லூரியில் இடம் கிடைக்காமல் ஏதோ ஒரு கல்லூரியில் சேர்ந்து தரமான படிப்பு, ஆய்வக வசதிகள், தரமான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் வாழ்கையே திசை மாறிப்போய் விடுகிறது. இதற்கு அரசாங்கமும் முக்கிய காரணியாக இருக்கிறது.

மேலும் பத்து சதவீதம் மாணவர்கள் இந்த சமுதாயத்தின் வற்புறுத்தல் காரணமாகவே பொறியியல் படிப்பில் சேருகிறார்கள். வெறும் பத்து சதவீத மாணவர்களே உண்மையான திறமையுடன் உண்மையாகவே தான் பொறியியல் படிப்பில் சேரவேண்டும் என்றத் தெளிவோடு சேர்ந்து படித்து முடிப்பதற்குல்லோ அல்லது படித்து முடித்து ஒரு வருடதிற்குல்லோ சரியான வேலையைப் பெற்று தங்கள் வாழ்க்கையை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச் செல்கிறார்கள். மற்றவர்கள் வெறும் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக்கொண்டு வாழ்கையில் ஒரு தெளிவு இல்லாமல் போகிறார்கள்.

நன்றி

G.ராஜேஸ் ராவ் MCA.

No comments:

Post a Comment