ஸ்மார்ட்
போன்களில் பல கேம்கள் இருந்தாலும், உலகம் முழுவதும்
பலரை அடிமையாக்கிய விளையாட்டுகளில் முதன்மையான ”ஆங்ரி பேர்ட்ஸ்”(Angry Birds) இன்று மேம்படுத்தப்பட்டு ”ஆங்ரி பேர்ட்ஸ் 2” ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு
அறிமுகமான ஆங்ரி பேர்ட்ஸ் கேம், அறிமுகமான சில
நாட்களிலேயே அனைவரின் மனதையும் கவர்ந்து, அடிமையாக்கியது.
சிறிய சிவப்பு உருண்டை உருவம், கோபமான கண்கள், வெறிக் கொண்ட பற்கள் என அதம் ஒவ்வொரு
அம்சத்தையும் கேம் பிரியர்கள் ரசித்தனர்.
மேலும் ஆங்ரி பேர்ட் புகைப்படம் பொறிக்கப்பட்ட உடைகள், காலணிகள், காதணிகள் என உபயோகிக்கும் ஒவ்வொரு அத்யாவசிய
பொருட்களிலும் ஆங்ரி பேர்ட்ஸின் உருவம் ஆதிக்கம் செலுத்தியது.
ஆங்ரி பேர்ட்ஸ் போன்று பல கேம்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதிகார பூர்வமாக எந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பும்
வெளியாகவில்லை. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு அதிகாரப்பூர்வ ’ஆங்ரி பேர்ட்ஸ் 2” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆங்ரி பேர்ட்ஸ் 2 பதிப்பு
ஆண்ட்ராய்ட் மற்றும் iOS இயக்குதளங்களுக்கு
மட்டுமே இன்று வெளியாகியுள்ளதாகவும், விண்டோஸ்
பயனர்களுக்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பதிப்பில் பல சுவாரஸ்யமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ”ஆங்ரி பேர்ட்ஸ் 2” வெளியான முதல் நாளிலேயே அதிக அளவில்
தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment