Tuesday 4 November 2014

பாதாம் அல்வா செய்யும் முறை


பாதாம் அல்வா



தேவையான பொருள்கள்:
பாதாம் பருப்பு -1டம்ளர்
சர்க்கரை -11/2டம்ளர்
நெய் -11/2டம்ளர்
முந்திரிப் பருப்பு -1டே.ஸ்பூன்
கேசரிப் பவுடர் -2சிட்டிகை
பால் -1/4டம்ளர்
தண்ணீர் -1/4டம்ளர்
ஏலப்பொடி -1/4ஸ்பூன்
செய்முறை:
பாதாம் பருப்பை, ஒரு மணி நேரம் ஊறவைத்து, தோலை உரித்து எடுத்துவிடவும்.
ஊறிய பருப்பை, மிக்ஸியில் நன்றாக மைய அரைக்கவும். அரைக்கும் பொழுது தண்ணீருக்குப் பதிலாக பாலை சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதை மீதம் பால் இருந்தால் சேர்த்தோ அல்லது தண்ணீரை விட்டோ கூழ்போல் கரைத்துக் கொள்ளவும்.
சிறிதளவு நெய்யை வைத்து, முந்திரிப் பருப்பை ஒடித்து, வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
தண்ணீரில் சர்க்கரையைப் போட்டு நல்ல கம்பிப் பாகு நிலை வரும் வரைக்கும் கொதிக்க விடவும். கம்பிப் பதம் வந்தவுடன் அடுப்பைச் சிறியதாக வைத்து, அரைத்த கூழைக் கொட்டிக் கிளறிக் கொண்டேயிருக்கவும்.
அடுப்பில் கிளறிக் கொண்டிருக்கும் பொழுதே, மீதமுள்ள நெய்யை, கொஞ்சம் கொஞ்சமாக உருக்கி ஊற்றவும். கேசரிப் பவுடரைச் சேர்க்கவும்.
சிறிது நேரத்தில் உள்வாங்கிய நெய்யை அல்வா வெளியேற்றும் அல்லது கக்கும்.
அப்பொழுது ஏலப்பொடியையும் தூவிக் கிளறி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டவும்.

No comments:

Post a Comment