Saturday 15 November 2014

அஜித்திற்கு கோவில் கட்டி கும்பிடனும் - தயாரிப்பாளர்


தற்போது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் பிரச்சினை.
சில வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி, ஸ்டூடியோ 9 உரிமையாளர் ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் 'வசந்தகுமாரன்' என்ற படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகை வாங்கியிருந்தார், சில காரணங்களால் படத்திற்கு சரியாக கால்ஷீட் கொடுக்க முடியாமல் திணறினார் விஜய் சேதுபதி.
அட்வான்ஸ் தொகை வாங்கிவிட்டு, கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார் என்று விஜய் சேதுபதி மீது சுரேஷ் புகார் தெரிவித்தார். அதற்கு விஜய் சேதுபதி தயாரிப்பாளர் சுரேஷ் தன்னை ஆளை வைத்து மிரட்டுவதாக பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை பார்த்து கோடம்பாக்கமே அதிர்ந்து போய் இருந்தது.
இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் சுரேஷ் சில ஆதாரங்களை கையில் வைத்துக்கொண்டு விஜய் சேதுபதி மீது சரமாரியாக புகார் கூறினார். மேலும் நான் எப்போதும் மிரட்டல், தகாத வார்த்தையில் திட்டியது போன்ற கீழ் தரமான வேலைகளை செய்ய மாட்டேன். ஒரு தயாரிப்பாளாராக இந்த வசந்தக்குமாரன் படத்திற்காக நிறைய இழந்துள்ளேன்.
தயாரிப்பாளர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று தற்போது உள்ளவர்கள் ரஜினி சார் அவர்களை பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும். அதேபோல் அஜித் சார்க்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும். ஏ.எம்.ரத்னம் அவர்கள் பணக்கஷ்டத்தில் இருந்த போது தானே முன் வந்து அஜித் நடித்துக் கொடுத்தார். அந்த மனதிற்கு தான் அந்த படம் ஹிட் ஆனது’ என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment