Friday 14 November 2014

சிலிர்க்க வைக்கும் லிங்கா பாட்டு

ஆணியாகப் பிறந்தாய் – உனக்கு
அடிகள் புதிதில்லை


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்க்கு பாட்டெழுதுவது என்றால் வைரமுத்துவுக்கு அப்படி ஒரு உற்சாகம். லிங்காவில் அவர் எழுதியுள்ள உண்மை ஒரு நாள் வெல்லும் பாடல், ரஜினிகாந்த்தின் குணத்தையும் அனுபவத்தையும் ஒருங்கே சொல்லும் வகையில் அமைந்துள்ளது.
அந்தப் பாடல்…
உண்மை ஒருநாள் வெல்லும் இந்த
உலகம் உன்பேர் சொல்லும் – அன்று
ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா
பொய்கள் புயல்போல் வீசும் ஆனால்
உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று
நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே
கலங்காதே
கரையாதே
ராமனும் அழுதான்
தர்மனும் அழுதான்
நீயோ அழவில்லை
உனக்கோ அழிவில்லை
ஆணியாகப் பிறந்தாய் – உனக்கு
அடிகள் புதிதில்லை
கலங்காதே
கலங்காதே
கரையாதே
சிரித்துவரும் சிங்கமுண்டு
புன்னகைக்கும் புலிகளுண்டு
உரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள் உண்டு
பொன்னாடை போர்த்திவிட்டு
உன்னாடை அவிழ்ப்பதுண்டு
பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு
பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும் – அதன்
உள்ளத்தை வீழ்த்திவிட முடியாது
சுட்டாலும் சங்கு நிறம்
எப்போதும் வெள்ளையடா
மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே
கெட்டாலும் நம்தலைவன்
இப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல்கரம் வீழாது தானே!
பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் – அவன்
புன்னகையைக் கொள்ளையிட முடியாது
நன்றி - என்வழி

No comments:

Post a Comment