பாலிவுட் நடிகர் அமீர் கான் வில்லனாக
மற்றும் வித்தியாசமான கதாபாத்திரம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இவரின்
பி கே படம் வரும் டிசம்பர் மாதம் வெளிவர இருக்கிறது, மேலும் இவர் இந்தியாவின் மிக
பெரிய இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இதைப்பற்றி பேசியதாகவும் செய்திகள்
வெளிவந்துள்ளது.
எந்திரன் திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா
ராய் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆனது, அப்போது அனைத்து சாதனைகளையும்
முறியடித்தது. சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்த்திடம் எந்திரன் 2 பாகம் வருமா
என்று கேட்டதற்கு அதைப்பற்றி ஷங்கர் முடிவெடுப்பார் என்று கூறியிருந்தார். சமிபத்தில்
ஷங்கர், அமீர் கான் சந்தித்து எந்திரன் 2 பாகம் கதையை விவாதித்தார்கள்.
இதில்
அமீர் கானுக்கு திருப்தி ஏற்பட பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம்
தயாரிக்கும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. எந்திரன் 2 பாகம் படத்தில் ரஜினிக்கு
பதிலாக அமீர் கான் நடிப்பாரா அல்லது ரஜினிகாந்த் அமீர் கான் இருவரும் சேர்ந்து
நடிபார்களா என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
No comments:
Post a Comment