Saturday 22 November 2014

கருச் சிதைவு ஏற்படக் காரணங்கள்

(Source cambridgesemantics)


கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தாயின் உடல்நிலையும், கரு வை தாங்கும் சத்தும் இல்லாததே முக்கியகாரணமாக கூறப்படுகிறது. 

கருவானது கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் கருச் சிதைவு அபாயம் ஏற்படும்.

கருவானது கருப்பையில் சரியான முறையில் தங் காமல் இருந்தா லும், கருப்பையின் வாய் திறந்திருத்தலும் கருச்சிதைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய பிரச்சினைகளை சரிசெய்ய தகுந்த மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் கருச்சிதைவு தானாகவே ஏற்பட்டுவிடும். இதேபோல் கருப்பை சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் கருச்சிதைவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. கருப்பையில் சில கட்டிகள் தோன்றுவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது. தொற்று நோய்களால் பாதிக்கப்படும் போது கருச்சிதைவு ஏற்படுகிறது.

சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட கருச்சிதைவை அதிகப்படுத்துகின்றன.

நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் கருச்சிதைவை வலிந்து அழைக்கும் காரணிகள். மனநலக் கோளாறுகள் கருச்சிதைவில் கொண்டுபோய் விட்டுவிடுகின்றன. இதன் காரணமாகவே கருவுற்று மூன்று மாதங்களுக்கு கர்ப்பிணிகள் பாது காப்பாக இருக்கவேண்டும் பயணங்களை தவிர்க்க வேண்டும்.

முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஆபத்து அதிக மென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக மன இறுக்கமின்றி இருக்கவேண்டும். அதிக களைப்புதரக்கூடிய பணி களைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும் ஓய்வும் தேவை.


நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். உயர் ரத்தஅழுத்தம்,  நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக் கொள்ளவேண்டும். எக்காரணம் கொண்டும் சுயவைத்தியம் செய்யக்கூடாது. கர்ப்பிணிகள் இந்த வழிமுறை களை விழிப்புணர்ச்சியோடு ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், கருச்சிதைவை முடிந்தவரை தடுத்து விடலாம்.

No comments:

Post a Comment