Tuesday 11 November 2014

சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படாதே விஜய்யை எச்சரித்த சூர்யா..!




ரஜினியின் சூப்பார் ஸ்டார் பட்டம் குறித்து கடந்த சில வருடங்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த பரபரப்புக்கு காரணம் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதுதான்.
இதில் ஒரு முன்னணி நாளிதழ் ஒன்று யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கருத்து கணிப்பு நடத்தியதாகவும் அந்த கருத்து கணிப்பில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் செய்திகள் வெளியானது. அதுவும் விஜய்க்கு இந்த பட்டத்தை கொடுக்க விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிறகு ஒரு சில காரணங்களால் அது நடக்காமல் போனது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து எஸ்.ஜே.சூர்யா ஒரு சில கருத்துகளை கூறியுள்ளார். நல்ல படைப்பாளிகளையும், சாதிக்க வேண்டும் என்ற வெறியொடு கோலிவுட்டில் வாய்ப்பு தேடி அலையும் திறமைசாலிகளையும் இணைக்கும் ஒரு இயக்கமாக ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்துள்ளார் பீட்சா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
இதன் தொடக்கவிழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கலந்து கொண்டு பேசினார். அவர் தன்னுடைய பேச்சில், "சினிமாவில் வரும் அனைவரும் ரஜினிபோல நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அவருடைய இடமான சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படுவதுதான் தவறு.
சாதாரண கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த் ஒரே நாளில் சூப்பர் ஸ்டாராக மாறவில்லை. அதற்கு பின்னால் பலவருடங்கள் அவர் கடுமையாக உழைத்த உழைப்பு இருக்கின்றது. சினிமாவுக்கு பத்து படங்கள் ஹிட் கொடுத்தவுடன் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படக்கூடாது. அப்படி ஆசைப்பட்டால் அவர்கள் இருக்கின்ற இடத்தையும் இழந்துவிடுவார்கள் என்று பேசியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவின் இந்த பேச்சு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக காயை நகர்த்தி வரும் விஜய்யை தான் அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.

No comments:

Post a Comment