Tuesday 9 December 2014

நெல்லையில் யுவன் நடத்தும் ‘யுவன் மியூசிக்கல் எக்ஸ்பிரஸ்'



பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இசை நிகழ்ச்சியை பல்வேறு வெளிநாடுகளில் நடத்தியவர் இப்போது முதன் முறையாக திருநெல்வேலி நகரில் நடத்துகிறார். பொங்கலன்று அதாவது ஜனவரி 17 இந்த நிகழ்ச்சியை பாளையங்கோட்டை பெல்பின்ஸ் திடலில் நடத்துகிறார் யுவன். இந்த நிகழ்ச்சிக்கு யுவன் மியூசிக்கல் எக்ஸ்பிரஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்ச்சியின் பர்ஸ்ட் லுக் சமுக வலைதளங்களில் வெளியிட்டு பேசிய யுவன் கூறுகையில் எங்கோ சென்று இசையமைப்பதைக் காட்டிலும் நம் மண்ணில் நடத்த வேண்டும் என்று எண்ணித்தான், நெல்லையை தேர்ந்து எடுத்தேன். எனது முதல் படமான அரவிந்தன்'கூட இங்குதான் படமாக்கப்பட்டது," என்றார்.

பாடகர்கள் கார்த்திக், ஹரிசரண், ரஞ்சித், விஜய் யேசுதாஸ், செந்தில்தாஸ், வாசு, சத்யன், பெல்லிராஜ், ஸ்வேதா பண்டிட், ப்ரியா ஹிமேஷ், பிரியதர்ஷினி, ரம்யா ஆகியோரும் மேடையில் தோன்றி பாடப்போகிறார்கள்.

இந்த இசை நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக இசைஞானி இளையராஜாவும் தோன்றி பாடப்போகிறார்.

No comments:

Post a Comment