Tuesday 11 November 2014

'ஐ' கண்டிப்பா வராது



இந்த வருடத்தில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் படம் எதுவென்றால் அது ’ஐ’ படம் தான். இந்தப் படத்தை தான் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஏன் திரையுலக பிரபலங்கள் கூட ஐ எப்போது ரிலீஸாகும் என்று எதிர் பார்த்துகொண்டு இருக்கின்றனர். ஆனால் இப்படத்தை பற்றி சில அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதாவது ‘ஐ’ படத்தின் பட்ஜெட் எந்தளவுக்கு எகிறிக் கிடக்கிறதோ, அதைவிட டபுள் மடங்கு அந்தப் படத்தைச் சுற்றிப் பிரச்சனைகளும் குவிந்து கிடக்கிறதாம்.
ஷங்கருக்கும், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் இடையே சம்பளப் பிரச்சனை, இரவு பகலாக உழைத்த டெக்னீஷியன்களுக்கு சம்பள பாக்கி, ஹீரோயின் எமிக்கு சம்பளப் பாக்கி, கடன் வாங்கிய வங்கிகளுக்கு அசலும், வட்டியும் பாக்கி என ஏகப்பட்ட பாக்கி பிரச்சனைகள் ‘ஐ’யின் கழுத்தை நெரித்துக் கொண்டு நிற்கின்றன.
முதலில் படம் தீபாவளி ரிலீஸ் என்று சொல்லப்பட்டது. தீபாவளி வந்தது, ஆனால் படம் வரவில்லை. பின்னர் நவம்பர் ரிலீஸ் என்றார்கள். நவம்பரும் வந்து விட்டது. ஆனாலும் ‘ஐ’ ரிலீசுக்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்துப் பார்த்ததில் இப்போது ஐ படம் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ஐ இப்போதைக்கு வராது.. இன்னும் சில மாதங்கள் ஆகும் என்கின்றனர். இதிலிருந்த என்ன தெரிகிறது என்றால்..? அடுத்த ஆண்டு பொங்கல் வரும், ஆனால் பொங்கலுக்கு ‘ஐ’ வருமா..? என்பது தான்.

No comments:

Post a Comment