Friday 2 January 2015

தொடாமலே “காரியத்தை” சாதிக்கலாம்


தொடுதல் என்பதுதான் தங்கள் துணையிடம் உறவின் போது ஆவலை வெளிப்படுத்தும் சிறந்த வழி. ஆனால் தொடாமலேயே காரியத்தை சாதிக்க முடியும் உணர்வு பூர்வமான செய்கைகளினால் ஆவலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யமுடியும்.
உங்கள் துணையின் அருகில் நெருக்கமாக அமருங்கள், தொடவேண்டாம். துணையின் கூந்தலையும், காதுமடலையும் லேசாக மிகவும் முகர்ந்து பார்த்தாலே போதும். உணர்ச்சி வசப்படத் தொடங்கி விடுவார்கள் பெண்கள். உங்களின் உணர்வுப்பூர்வமான இந்த நெருக்கம் தொடாமலேயே உங்களின் அதீத காதலை வெளிப்படுத்தும். இருவருக்குமிடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.
சில “அந்த” படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம் ஆவலை வெளிக்கொணரும் பழங்களில் திராட்சைக்கும், ஸ்ட்ராபெரிக்கும் தனி பங்குண்டு. இந்த பழங்களைக் கொண்டு பெண்களில் இதழ்களைத் தீண்டலாம். கைகளால் தீண்டுவதை விட இந்த பழங்களினால் தொடுவது அதிக கிளர்ச்சியை ஏற்படுத்துமாம். அதேபோல் சாக்லேட், கேக் கிரீம்களும், காதலின் உணர்வை வெளிப்படுத்தும் என்கின்றனர் ஆராய்சியாளர்கள்.
மலர்களைவிட பெண்களின் உடல் மென்மையானது, பெண்களின் மென்மையான உடலை கைகளால் தொடுவதை விட பறவையின் இறகினால் லேசாக வருடுவது இதமான கிளர்ச்சியை ஏற்படுத்தும். அவர்களின் அந்த கிளர்ச்சி ஆணின் உணர்வுகளையும் அதிகரிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். மென்மையான தோலினை மயிலிறகால் வருடும் போது ஏற்படும் உணர்ச்சிக்கு ஈடு இணையில்லை என்கின்றனர் அவர்கள்.
தொட்டுத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை. பேச்சிலேயே கூட கிறங்கடிக்கலாம் என்கின்றனர் உளவியலாளர்கள். காதலை சொல்ல நெருக்கமான ஒரு சூழலில் மென்மையான, ரகசியத்தைப் போல பேசும் பேச்சிலும் கூட கிளர்ச்சியூட்டலாம் என்கின்றனர். இப்படி ஏதாவது புதிதுபுதிதாக முயற்சி செய்யுங்கள் உங்கள் இல்லறம் என்றுமே நல்லறமாகும்.

No comments:

Post a Comment