Monday 12 January 2015

ரஜினிகாந்தின் புண்ணியத்தில் ஜப்பானில் காப்பற்றபட்ட நடிகை


அம்புலி 3D படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர்கள் அடுத்து ஜம்போ 3D என்ற படத்தை இந்தியா மற்றும் ஜப்பான் கூட்டு முயற்சியில் தயாராகிவருகிறது.

இந்த படத்தில் அன்ஜெனா கீர்த்தி என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் பெருன்பான்மையான படப்பிடிப்பு ஜப்பானில்தான் நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக நடிகை அன்ஜெனா கீர்த்தி வழித்தெரியாமல் போய்விட்டார்.

அதிர்ஷ்டவசமாக ஒரு கார் ஓட்டுனரிடம் தான் ஒரு தமிழ்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜப்பான் வந்திருப்பதாகவும், ஊரைச் சுற்றிப் பார்க்க வந்தபோது வழிதவறிவிட்டதாகவும், கைபேசியை அறையிலேயே மறந்து வைத்துவிட்டதாகவும் உதவி கோரியுள்ளார்.

அந்த ஜப்பானிய கார் ஓட்டுனர் தமிழில் பேசி “தான் சூப்பர்ஸ்டார் ரசிகர் என்றும் அவருக்காகவே தமிழ் கற்றதாகவும், உங்களுக்கு உதவுவதாகவும் கூறி சிரமப்பட்டு நடிகை தங்கியிருந்த ஓட்டலின் விலாசத்தை கண்டுபிடித்து நடிகையை பாத்திரமாக விட்டுசென்றார்” என்று தன் அனுபவத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


தமிழை வளர்க்க வேண்டும் என்று வெறும் கோஷம் மட்டும் போட்டுவிட்டு தன் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்கவைக்கும் அரசியல்வாதிகளே தயவுசெய்து திருந்துங்கள். தமிழை வைத்து அரசியல் பிழைப்பு வேண்டாம்.

No comments:

Post a Comment