Showing posts with label Finance. Show all posts
Showing posts with label Finance. Show all posts

Wednesday, 29 July 2015

Amazon/eBay தளங்களில் குறைந்த விலையில் பொருள் வாங்க வேண்டுமா? ஒரு நிமிஷம்...

mobileadvertisingwatch


நாம் விரும்பும் சில அறிய பொருட்கள் Amazon/eBay கிடைக்கும் ஆனால் நாம் முதலில் தேடிப்பிடித்து விலையைப் பார்த்தால் அந்த பொருள் வாங்க வேண்டும் என்ற ஆசையே போய்விடும். பிறகு நாம் வேறு ஏதாவது வழியில் அந்த பொருளை வாங்கிவிடுவோம்.

இதே Amazon/eBay ல் நாம் விரும்பிய பொருளை நாம் விரும்பிய விலை அல்லது அதற்கும்கூட குறைவாக வாங்கமுடியும். ஆனால் அதற்கு சிறிது பொறுமை அவசியம். உங்களுக்கு பொறுமை இருந்தால் லாபம் உங்களுக்குத்தான்.

சரி குறைந்த விலையில் நாம் விரும்பும் பொருளை வாங்கும் வழியைப் பார்ப்போம்.

உங்களுக்கு தேவைப்படும் பொருள் Amazon/eBay ல் இருக்கிறதா என்று பாருங்கள், அப்படி தேடும் பொருள் இருந்து விலை அதிகமாக நீங்கள் கருதினால் அந்த பொருள் பெயர், வகை குறித்துவைத்துக்கொண்டு மீண்டும் கூகிள்(Google) ல் தேடுங்கள்.

இப்போது நீங்கள் தேடிய அதே பொருள் அதே வகை சற்று குறைந்த விலையில் இருப்பதை நீங்களே பார்க்கலாம். இதேபோன்று தினமும் ஒரு முறை மட்டும் தேடிப்பார்த்து விட்டுவிடுங்கள். மூன்றாவது நாள் அல்லது நான்காவது நாள் கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்க்கும் விலையில் நீங்கள் விரும்பிய பொருள் கண்டிப்பாக Amazon/eBay ல் கிடைக்கும்.

இது எப்படி சாத்தியம் என்றால் Amazon/eBay தளமானது, வாடிக்கையாளர்கள் கடையில் பேரம் பேசி வாங்கும் முறையை தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்தான் நீங்கள் ஒவ்வொரு முறை தேடும்போது விலை சற்று குறைத்து காட்டுகிறது அமேசான்/eBay தளம்.

எச்சரிக்கை :

நீங்கள் தேடும் அதே பொருளை நிறைய பேர் தேடினால் கண்டிப்பாக விளையும் அதிகமாகவே காட்டும் கவனம் தேவை.

Tuesday, 26 May 2015

தலைவா... துணிந்து DTH - ல் உங்கள் படத்தை வெளியிடுங்கள் – ஒரு ரசிகனின் கடிதம்.



அன்புள்ள தலைவனுக்கு(சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்),

நாங்களும் “லிங்கா” திரைப்படம் குறித்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்று காத்திருந்தோம் ஆனால் சில பணம் திண்ணி பருந்துகள் வேண்டுமென்றே உங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் உங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இவர்கள் யாருக்காக செயல்படுகிறார்கள் என்று வெகு விரைவிலேயே தெரிந்துவிடும் அதனால் நீங்களோ அல்லது நாங்களோ சிறிதும் கவலைப்படத் தேவையில்லலை. அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம்.

நீங்கள் கவலையே படாமல் அடுத்து “அட்டகத்தி”,”மெட்ராஸ்” இயக்குனர் இரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தை DTH ல் வெளியிடுங்கள். இதுவரையில் உங்களைத் திரையில் காணவேண்டி சராசரியாக அதிகபட்சமாக ரூபாய் 2௦௦௦ வரை ஒரு குடும்பத்திற்கு செலவு செய்கிறோம். அதாவது முதல்நாள் டிக்கெட்டின் விலை மிகக்குறைந்தபட்சம் ரூபாய்.250 என்ற அளவில் இருக்கிறது. நான்கு பேர் இருக்கும் குடும்பத்திற்கே டிக்கெட்டின் விலை மட்டுமே ரூபாய் 1௦௦௦ வருகிறது. பெரும்பாலான திரையரங்கில் தண்ணீர்கூட கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. திரையரங்கில் சாதாரணமாகவே இரண்டு மடங்கு அதிக விலை கொடுத்துதான் தின்பண்டங்கள் விற்கிறார்கள். மேலும் நங்கள் வரும் வாகனத்திற்கு பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையே அடிக்கிறார்கள். வாரநாட்களில் பகல் நேரத்தில் படம் பார்க்க வேண்டும் என்றால் அலுவலகத்தில் லாஸ் ஆப் பே பிடித்தம் செய்வார்கள், அதுவும் செலவுதான். இரவில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்ப ஆட்டோ கிடைக்காது, கிடைத்தாலும் இரு மடங்கு வசூல் செய்வார்கள்.

மொத்தத்தில்

டிக்கெட் கட்டணம் 1௦௦௦ + தின்பண்டங்கள் + பார்க்கிங் + போக்குவரத்து செலவு (பேருந்து/ ஆட்டோ/ கால் டேக்சி) + பெட்ரோல்/ டிசல் (குறைந்தபட்சம் 2 லிட்டர்) செலவு + வண்டித் தேய்மானம் + லாஸ் ஆப் பே (ஏற்படலாம்) + இதர செலவுகள்(ஏற்படலாம்).

இத்தனைக்கும் கணக்கு பார்த்தால் சாதாரணமாகவே நான்கு பேர் இருக்கும் குடும்பத்திற்கே குறைந்தபட்சம் ரூபாய் 1500 மற்றும் அதிகபட்சமாக ரூபாய் 2000 செலவு பிடிக்கும். அதுவே ஐந்து பேர் அல்லது அதற்கும்மேல் உள்ள குடும்பம் என்றால் ரூபாய் 3௦௦௦ செலவு ஆகுமே(நாங்கள் பாவம் அல்லவா!). மாதத்திற்கு ரூபாய் 15௦௦௦ முதல் 2௦௦௦0 வரை சம்பளம் வாங்குபவர்கள் என்றால் இதற்கே ரூபாய் 3௦௦௦ கரைந்துவிடும். அதற்கும் கீழே சம்பளம் வாங்கினார்கள் என்றால் என்றால் அவர்களின் நிலைமையை யோசித்துப்பாருங்கள். ரூபாய் 20000 மேல் சம்பளம் என்றால் சமாளித்துவிடுவார்கள் ஆனால் எல்லோருக்கும் அந்த குடுப்பினை அமைவதில்லையே!. இவ்வளவு செலவு செய்யவேண்டுமா என்ற கேள்வி எழலாம்தான் தமிழ்நாட்டில் வேறு பொழுதுபோக்கு அம்சம் என்ன இருக்கிறது அப்படியே இருந்தாலும் இதைவிட அதிகமாகத்தான் செலவு ஆகிறதே!.

சரி விசயத்திற்கு வருவோம், ரூபாய் 1௦௦௦ கட்டணம் என்ற முறையில் DTH ல் ஒளிபரப்பினால்கூட எங்களுக்கு ரூபாய் 500 முதல் 2௦௦௦ வரை மிச்சமாகும். குடும்பத்தில் எத்தனைப்பேர் இருந்தாலும் பிரச்சினை இல்லை சமாளித்துவிடலாம். அதேவேளையில் இரண்டவது முறை பார்க்கவேண்டும் என்று நினைத்தால் ரூபாய் 500 என்ற கட்டணத்தில் ஒளிபரப்பலாம். மூன்றாவது முறை என்றால் ரூபாய் 200 என்ற ரீதியில் கட்டணம் வசூல் செய்துகொள்ளலாம். இதுபோன்று நாங்கள் திரையங்கில் சென்று இரண்டு முறை, மூன்று முறை குடும்பத்துடன் படம் பார்க்க ரூபாய் 1௦௦௦௦ வரை செலவு ஆகுமே!.

இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமாக DTH சந்தாதாரர்கள் இருக்கிறார்கள் இதில் மாதந்தோறும் தவறாமல் ரீசார்ஜ் செய்வோர் 3.5 கோடி முதல் 4 கோடி சந்தாதாரர்கள் என்று TRAI நிறுவனம் கூறுகிறது. இதில் அதிகபட்சமாக 15 லட்சம் சந்தாதாரர்கள் கட்டணம் செலுத்தினால்கூட முதல் மூன்றே நாட்களில் ரூபாய் 200 முதல் 250 கோடி வசூல் ஆகும்.

தமிழ் படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் இடங்கள் என்று பார்த்தால்
1.தமிழ்நாடு
2.ஆந்திரம்(ஆந்திரா, தெலுங்கானா)
3.கேரளம் மற்றும் கர்நாடகம்
4.வடமாநிலங்கள்
5.வெளிநாடுகள் (அங்கேகூட DTH ல் வெளியிடலாம்).

வேறு மாநிலங்களில் அல்லது நாடுகளில் அந்தந்த மொழிகளில்கூட மொழிமாற்றம் செய்து DTH ல் வெளியிடலாம். தமிழ்மொழி படங்களுக்கு வேறு மொழி பேசும் மக்களிடமும் ஒரு சந்தை உருவாக ஒரு வாய்ப்பு அமையும்.

ஒரு படத்திற்கு அதிகபட்சமாக ரூபாய் 80 கோடி செலவு செய்து வெளியிட்டால்கூட முதல் முறை பார்வையாளர்களை சென்றடைந்தாலே ரூபாய் 100 முதல் 120 கோடி வரையில் வசூல் ஆகும். DTH நிறுவனங்களே விளம்பரபடுத்திவிடுவர்கள், விளம்பர செலவு மிச்சம்.

தியேட்டரில் வேலை செய்பவர்கள் சிறுக சிறுக வேறு வேலைகளுக்கு மாறிவிடுவார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் இதுவரை சம்பாரித்தது போதும் அவர்கள் காம்ப்ளெக்ஸ் கட்டிக்கொண்டுவிடுவார்கள். விநியோகஸ்தர்களும் இதுவரை சம்பாரித்து சொத்து சேர்த்தது போதும். நாங்கள் சிரமப்பட்டு சேர்த்த பணத்தை வரைமுறைகள் இல்லாமல் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் விழுங்கியது போதும்.

எங்கள் வீட்டிலேயே உட்கார்ந்த இடத்திலேயே குறைந்த செலவில் நாங்கள் விரும்பும் நொறுக்குத்தீணிகலோடு லாஸ் ஆப் பே இல்லாமல் போக்குவரத்து செலவு இல்லாமல் பார்க்கிங் கட்டணம் இல்லாமல் பெட்ரோல் டிசல் செலவு இல்லாமல் இதையெல்லாம்விட எத்தனைப்பேர் வேண்டுமானாலும் திரைப்படத்தைப் பார்க்கலாம். இதைவிட எங்களுக்கு என்ன வேண்டும்?  

நன்றி

ராஜேஸ் ராவ் rajeshrao180@gmail.com

Sunday, 30 November 2014

டிராவல் ஏஜென்சி – சின்ன முதலீடு பெரிய லாபம்

(Image Global traveler)

இப்போதெல்லாம் ஒரு சிறிய நிறுவனம் நிர்மாணிக்க வேண்டும் என்றால்கூட லட்சங்கள், கோடிகள் தேவைப்படும் பின்பு வேலையாட்கள் அவர்களுக்கு பயிற்சி என்று ஆரம்பத்தில் செலவு நீளுமே தவிர சற்றும் குறைய வாய்ப்பே இல்லை.

ஆனால் வெகு சில தொழில்கள் மட்டும்தான் சின்ன முதலிடுகள் செய்தாலே போதும் லாபத்தை வாரி இரைக்கும் தன்மை கொண்டது. படித்த படிப்பிற்கு சரியான வேலை கிடைப்பதில்லை நம் நாட்டில் அதனால்தான் என்னவோ நாம் படித்ததை செய்யும் வேலையில் பயன்படுத்த மறந்துவிடுகிறோம். அப்படி பயன்படுத்தினால் லாபமும், வெற்றியும் நிச்சயம். இதோ உங்களுக்காக OnlineArasan தளத்தின் வாயிலாக சில லாபகரமாக இருக்கும் சிறு தொழில்களைப் பற்றி தெரிவிக்கிறோம். படித்து பயன்பெறுங்கள், மற்றவருக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

டிராவல் ஏஜென்சி தொழிலைப் பொறுத்தவரையில் பெரிதாக முதலீடுகள் தேவையில்லை. ஆனால் இந்த தொழிலில் இறங்கும்முன் தயவுசெய்து குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஏற்க்கனவே டிராவல் ஏஜென்சி நடந்துகொண்டிருக்கும் இடத்தில் பயிற்சி எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

எப்படி செய்வது
இது மிகவும் சுலபம்தான் வெளியூர் செல்பர்களுக்கு பயணச்சிட்டு பெற்றுதரப் போகிறீர்கள். ஆனால் இதில் ஏகப்பட்ட தொழில் நுணுக்கங்கள் இருக்கிறது அதற்கேற்றவாறு செயல்பட்டால் ஒரே ஒரு வருடம்தான் நீங்கள் லட்சாதிபதி. நம்புங்கள் நிச்சயம் இது சாத்தியம்தான்.

சிறந்த இடம்
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, ஓசூர், நெல்லை, ஈரோடு, சேலம் மற்றும் சுற்றுலா சார்ந்த இடங்கள் இந்த தொழிலுக்கு மிகவும் சிறந்த இடங்கள், ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே தொழில் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும். மற்றபடிக்கு எல்லா மாவட்ட தலைநகரத்திலும் இந்த தொழிலை தாரளமாக செய்யலாம் ஏனென்றால் ஆரம்பத்தில் லாபம் குறைச்சலாக இருந்தாலும் நஷ்டத்திற்கு வாய்ப்பில்லை.

எப்படி ஆரம்பிப்பது
முதலில் உங்களால் பத்துக்கு பத்து அல்லது ஐந்துக்கு ஐந்து என்ற அளவில் இடம் பிடிக்க முடித்தால் போதுமானது. பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது இன்னும் பெரிய இடம்பார்த்து மாறிவிடுவது நல்லதுதான் ஆனால் ஆரம்பத்தில் வசதிகள் குறைவாகவே இருந்தாலும்கூட அங்கேயே ஆரம்பியுங்கள் தவறில்லை. சிலருக்கு இந்த இடத்தைக்கூட பிடிக்க முடியாமல் போகலாம் அல்லது முன்பணம், வாடகைக்கு பணமில்லை என்று வருத்தமோ கவலையோ வேண்டாம். உங்கள் வீட்டின் முன் அறையில் கூட ஒரு மேசை, இரண்டு நாற்காலி போட்டு நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்.

எப்படி அணுகுவது
பொதுவாகவே நாம் மூன்று வழிகளில் பயணம் செய்கிறோம் அதாவது பேருந்து, இரயில், விமானம் பயணங்கள். இந்த மூன்று விதமான பயணத்திற்குத் தகுந்தற்போல உங்கள் அணுகுமுறை இருக்கவேண்டும். சரி நீங்கள் பேருந்து பயணிகளுக்கு பயணச்சிட்டு பதிவு செய்து தருகிறீர்கள் என்று வைத்துகொள்வோம். பயணிகளுக்கு தெரியும் விதத்தில் ஒரு பேனர் தயார் செய்து சரியான இடத்தில் நிறுவுங்கள் அல்லது தனியார் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் உங்கள் பேனர் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். உங்கள் கடையும் இந்த இடத்திலேயே இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள் இது நன்றாக பயன்தரும். உள்ளூர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யலாம், காலை நாளிதழ்களில் நோட்டீஸ் தயார் செய்து இணைத்து கொடுக்கலாம், உங்கள் ஊர் ஆரம்பம் மற்றும் எல்லையில் விளம்பர பேனர் வைக்கலாம்.

இல்லை இந்த அளவுக்கு என்னால் செலவு செய்து விளம்பரப்படுத்த முடியாது என்றாலும்கூட கவலை வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியது அதிகமாக பயணம் செய்பவர்கள் யார் என்று தெரிந்துகொண்டு அவர்களை தொடர்கொண்டு சிறிது சிறிதாகவே ஆரம்பிக்கலாம்.

உங்களின் தரம்
ஒரு நிறுவனத்தின் தரம்தான் மிகவும் முக்கியமானது, தரம் இல்லையேல் அந்த நிறுவனத்தின் பொருள் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்கூட அது குப்பைக்கு சமம்தான். எனவே நல்ல நிலையில் இருக்கும் பேருந்தாக பார்த்து பயணச்சிட்டு பதிவு செய்துகொடுங்கள். உங்களிடம் வருபர்களை கண்ணியமாக நடத்துங்கள் மரியாதையாகவும் பேசுங்கள் இல்லையேல் மறுபடி உங்களைத்தேடி வரவே மாட்டார்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களையும் உங்களிடம் அனுப்பமட்டர்கள்.

பேருந்துகளை சரியாக தேர்ந்தெடுங்கள்

எப்போதும் தரமாக இருக்கும் பேருந்துகளுக்கே முன்னுரிமை கொடுங்கள் தரமில்லாத பேருந்துகளைத் தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது.  பக்கத்து மாநிலங்களுக்கு செல்லும் பேருந்தாக இருந்தால் நிச்சயம் பெர்மிட் வைத்திருக்கிறார்களா என்று தெரிந்துகொண்டு பயணச்சிட்டு பதிவு செய்து கொடுங்கள். 

Thursday, 27 November 2014

ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் சிறப்புக் கட்டணம்


வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகள், வெளியூர் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தினால் கமிஷன் பிடித்தம் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலானோர் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர்.

சினிமா டிக்கெட்டிலிருந்து டெலி ஷாப்பிங் வரை அனைத்துவிதமான பரிவர்த்தனைகளும் இப்போது ஆன்லைன் மூலம் எளிதில் செய்ய முடிகிறது. ஆனால், இந்தப் பரிவர்த்தனைகளுக்காக பெரும்பாலான வங்கிகள் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.

இந்தியா முழுவதும் தினமும் சுமார் 10 லட்சம் கோடிக்கு ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இதில் ஒருவர் கணக்கிலிருந்து இன்னொருவர் கணக்குக்கு ஆன்லைனில் பணம் மாற்றப்படுவதற்கு தற்போது மிகக் குறைந்த அளவிலான கட்டணங்களை வங்கிகள் வசூலிக்கின்றன. ஒருசில பரிவர்த்தனைகள் கட்டணம் ஏதும் இல்லாமலும் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் ஏ.டி.எம். பயன்பாட்டுக்கு அனைத்து வங்கிகளும் கட்டணம் விதிக்கத் தொடங்கினால் ஆன்லைன் பரிவர்த்தனைகள் இன்னும் அதிகரிக்கக் கூடும். மேலும், குறைந்தபட்ச பண இருப்பு இல்லாத வங்கிக் கணக்குகளுக்கு அபராதம் வசூலிக்கக் கூடாது என அண்மையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகள் குறைந்தபட்ச பண இருப்பு கட்டுப்பாட்டை அமலில் வைத்திருப்பதால் சாமானியர்கள் வங்கிக் கணக்குத் தொடங்கத் தயங்குகிறார்கள். இதனால் இவர்களின் பரிவர்த்தனைகள் அனைத்தும் நேரடி கொடுக்கல் வாங்கல் மூலமே நடைபெறுகிறது. இந்த நிலைமையை தவிர்த்து அனைவரது பண பரிவர்த்தனைகளையும் வங்கிகள் மூலமாக நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் குறைந்தபட்ச பண இருப்பு முறையை ரத்து செய்ய அறிவுறுத்தி இருக்கிறது ரிசர்வ் வங்கி.

ஆனால், இந்த அறிவிப்பால் வங்கிகளுக்கு குறைந்தபட்ச பண இருப்பு இல்லாத கணக்கு களையும் அதிகம் பரிவர்த்தனை இல்லாத கணக்குகளையும் கையாள வேண்டிய பணிச்சுமை ஏற்படுகிறது. இதைக் கணக்கில் கொண்டு விதிவிலக்கு ஏதுமின்றி அனைத்து விதமான ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் சிறப்புக் கட்டணம் வசூலிக்க அனுமதி கேட்டு வங்கிகள் தரப்பிலிருந்து அண்மையில் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியும் இதை பரிசீலிப்பதாக உறுதி கொடுத்திருக்கிறது. எனவே விரைவில் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் சிறப்புக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வரலாம் என்று வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Tuesday, 4 November 2014

ATM சிக்கனமாக பயன்படுத்த யோசனைகள்

1.      



      உங்களுக்கான ஒரு மாத செலவுகளைத் திட்டமிட்டு அதற்கேற்றவாறு பணத்தை எடுத்து சரியாக செலவு செய்யப் பழகுங்கள். இப்படி செய்யும்போது இரண்டு அல்லது மூன்று பரிவர்த்தனைகளுக்கு  மட்டுமே ஏடிஎம் கார்டினை பயன்படுத்தும் நிலையை உருவாக்கிக் கொள்ளலாம். அதிகத் தொகையை எடுக்க நேரிட்டால், வங்கிக்குச் சென்று எடுங்கள். 

  இதன்மூலம் ஏடிஎம் கார்டின் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்க முடியும். காசோலைகளைப் பயன்படுத்த கட்டணம் இல்லை என்பதால், காசோலைகள் ஏற்றுக்கொள்ள கூடிய இடங்களில் காசோலைகளைப் பயன்படுத்துங்கள். 
அனைவருக்குமே தற்போது சம்பளம் என்பது பெரும்பாலும் நேரடியாக வங்கி கணக்கில் சேரும்படியுள்ளது. உங்கள் சம்பளத்தில் முதன்மை செலவுகள் என்ன என்பதை உணர்ந்து, அதனை செலவு செய்ய ஒரே நேரத்தில் பணத்தை எடுத்து செலவழிப்பது நல்லது. உதாரணமாக வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணம், கல்லூரிக் கட்டனம்

பஸ் பாஸ் போன்றவற்றை கணக்கிட்டு ஒரேமுறையில் எடுப்பது சிறந்தது. கல்லூரி மாணவர்கள்தான் இதன்மூலம் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதற்கு பெரும்பாலும் இன்டர்நெட் பேங்கிங் வசதி இருக்கும். அதனை பயன்படுத்தி தங்களது தேவைகளையும், பயன்பாட்டு கட்டணங்களையும் குறைக்கலாம். ஷாப்பிங் செய்யும்போது பணத்துக்குப் பதிலாக டெபிட் / கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துங்கள். 

பெரிய மால்களில் ஏடிஎம்கள் வைத்திருப்பார்கள். அவற்றில் சென்று பணத்தை எடுத்து மால்களின் பல கடைகளில் செலவு செய்யாமல், ஒரு மாதத்துக்கு எவ்வளவு செலவு செய்வோம் என கணித்து, அந்த தொகைக்கு அந்ததந்த மால்களின் கார்டுகளை பெற்று, அதன்மூலம் 

ஷாப்பிங்குக்காக பணம் எடுத்து செலவழியும் பயன்பாட்டு கட்டணத்தைத் தவிர்க்க பாருங்கள். மெட்ரோ நகரங்களில் ஏடிஎம் பயன்பாட்டுக்கு குறைவான வாய்ப்புகள் வழங்கப்படுவதால், நீங்கள் இருக்கும் இடத்தில் அல்லது பயணிக்கும் இடத்தில் மெட்ரோ எல்லைக்குள் அல்லாத ஏடிஎம்களைப் பயன்படுத்தினால் உங்களது வாய்ப்புகளை மிச்சப்படுத்தலாம். 

உங்களால் ஒரு மாதத்துக்கான செலவை முழுமையாக திட்டமிட சிரமமாக இருந்தால், ஒரு வாரத்துக்கு ஒருமுறை என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதையும் நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் முதலில் செய்யுங்கள்.  

தொலைபேசிக் கட்டணம், ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணம் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செய்யுங்கள். ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதன் மூலம் உங்கள் நேரத்தையும் தேவையில்லாமல் ஒரு ஏடிஎம் பயன்பாட்டையும் குறைக்கலாம். இந்த மாதம் இந்த செலவு மட்டுமே என திட்டமிட்டால், அடிக்கடி ஏடிஎம்மை நாட வேண்டிய அவசியம் இருக்காது.